ஒரு நாள் வயது மதிக்கத்தக்க சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை, கல்லரிச்சல் கிராமத்தை சேர்ந்த பெண்னொருவர் தனக்கு பிறந்த குழந்தையை தனது காதலனுடன் இணைந்து தனது வீட்டின் அருகிலுள்;ள சுவர் ஓரமாக புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து புதைக்கப்பட்ட சிசு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கணகரத்தினம் ஆனந்தி, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மென்டீஸ்,கல்முனை அஸ்ரப் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கிரியல்ல உள்ளிட்டோர் முன்னிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தயாரான சுமார் 35 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணுக்கு 55 வயதான ஆணுடன் (காதலன்) நீண்ட நாள் தொடர்பிருந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.