தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் எற்பாட்டில் 1ம் திகதி முதல் 4 ம் திகதி வரை தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு பொதுமக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்குமான மாபெரும் பண்பாட்டு விழாவும் கண்காட்சியும் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.
இவ்விழவின் ஆரம்ப நிகழ்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ளார். பிரதேச மக்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்திற்குமிடையில் புர்ரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. 'எனது தேசத்தின் ஒருமைக்காக இணையும் கரங்கள்' மாணவர் பண்பாட்டு விழா – 2011 எனும் நிகழ்வு 5 பிரதான பகுதிகளாக இடம்பெற்றது,
கல்விக் கண்காட்சி, கலை நிகழ்வுகள்,புத்தகக்கண்காட்சி, மரபுசார் உணவுத் திருவிழா, திரைப்பட விழா என்பன அடங்கியதாக நாளாந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. பொதுவாக திறந்த வெளிப் பண்பாட்டு நிகழ்வுகள், மேடை நிகழ்வுகள் என இரு பிரதான பிரிவுகளாக இவை இடம்பெற்றன.
மேலும் சிறுவர் சாகச கண்கவர் நிகழ்ச்சிகள், விநோத வேடிக்கைகள்,வர்த்தகக் கண்காட்சி,சிங்களக் கவியரங்கு, தீ மற்றும் கத்தியுடனான நடனம், இசை நிகழ்ச்சி,நாட்டார் கவியரங்கு, இஸ்லாமிய இசை நிகழ்ச்சி என்பன போன்ற பல்வேறு சிறப்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.