சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுததியிலிருந்து கடந்த எட்டு மாதங்களில் போக்குவரத்து சட்டங்களை மீறியோரிடமிருந்து 45இலட்சம் ரூபா தண்டப்பணமாக அறவீடு செய்யப்பட்டுள்ளது. இவ் வருட ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரைக்குமான தண்டப்பணமாகவே இத்தொகை அறவீடு செய்யப்பட்டுள்ளது என சம்மாந்தறை பொலிஸ் நிலை பொறிப்பதிகாரி ஜந்த தஹநக்க தெரிவித்தார்.கடந்த காலங்களில் நடைபெற்ற வீதி விபத்தக்களை குறைப்பதற்காகவே வாகன போக்குவரத்து பொலிஸ்சார் எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இவ் தண்டப்பணம் பெறப்பட்டுள்ளது. தற்போது எமது பிராந்தியத்தில் அகிகமானோர் தலைகவசம் அணிந்து செல்வது கூடியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.