சம்மாந்துறை மண்ணின் கலை,கலாசாரம்,பாரம்பரியம்,பண்பாடு வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் சம்மாந்துறை மண்ணின் இணையத்தளம்.www.sammanthurai.net
<தற்போது கிடைத்த செய்தி>>> உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்களது கைத்தொலைபேசிமூலம் பெற்றுகொள்ள - Follow Newsstr அனுப்புங்கள் 40404. மேலும்: www.facebook.com/newsstr + www.twitter.com/newsstr

அல் குர்ஆனை சுமந்த ” நுாறுல் குர்ஆன்” அல் ஹாபிழ் M.A. ஆதம் லெப்பை ஹசரத் அவர்கள் வபாத்தானார்கள்.



”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைக்கக்கூடியதாகும்” என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப தாறுல் ஹசனாத் மனனக் கல்லுாரி அதிபராக இருந்த அல் ஹாபிழ் அல்ஹாஜ்  M.A. ஆதம் லெப்பை  அவர்கள் இன்று 2013-05-11ல் சனிக்கிழமை தஹஜ்ஜீத், சுபஹ் ஆகிய தொழுகைகளை நிநைவேற்றிவிட்டு அல் குர்ஆனை ஓதிய நிலையில் வபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜி ஊன்.

இலங்கையின் முதலாவது அல் ஹாபிழ் இவர்களே தாறுல் ஹசனாத்தின் பாட நேரங்களில் புதிய மாற்றங்களைச் செய்து ”ஹிப்ழ்” செய்வதை இலகு படுத்தியவர் முழு நேர உஸ்தாதாக இருந்து மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர் அதன் பலனாக இலங்கையில் பல ஹாபிழ்களின் உருவாக்கத்திற்கு காரணமாக இருநந்தவர் அவரது பணியை கௌரவிக்கும் முகமாக ”நுாறுல் குர்ஆன் ” எனும் சிறப்புப் பட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருடிருந்தது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் அவரை நுழையச்செய்வானாக ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமீன்.

சம்மாந்துறையில் 'இளசுகள்' இருவெட்டு வெளியீட்டு விழா!


சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலய நாடக குழுவினரால் தயாரித்து வழங்கும் கல்வி விழிப்புணர்வூட்டும் விபரணச் சித்திரம் 'இளசுகள்' இருவெட்டு வெளியீட்டு விழா மற்றும் விருதுகள் வழங்குப் வைபவம் 16.03.2013 சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இளைய தலைமுறையினர் சிறுவயதில் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆழாகுதல் மற்றும் சிறுவயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளல் போன்றவற்றினால் எதிர்நோக்கும்; சவால்கள் அதனூடாக தாம் அனுபவிக்கம் துன்பங்கள் நோய்கள் என்பவற்றைச் சித்தரிக்கும் வகையில் இவ் இருவெட்டு அமையப் பெற்றிருந்தது.

யூ.என்.டீ.பி அம்பாறை மாவட்ட அலுவலகம் மற்றும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் என்பவற்றின் அனுசரணையுடன் ஆசிரியர்களான கே.விஜய், எம்.எஸ்.எம்.ஆரிப் ஆகியோரின் இயக்கத்தில் இவ் இருவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டன.

அதிபர் எம்.விஜயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜேஸ்வரன், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்> யூ.என்.டீ.பி நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட நிறைவேற்று அதிகாரி எம்.ஏ.சலீம், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. தௌபீக், யாழ்ப்பாண தேசிய கல்விக் கல்லூரியின் நாடகத்துறை விரிவுரையாளர் கே.திலகநாதன், ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி வண. சாய் மத்யூ உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் முதலாவது இருவெட்டினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜேஸ்வரன் பெற்றுக்கொண்டார் அத்துடன் நாடகத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள் மற்றும் அனுசரணையாளர்களும் அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




திருமண வலிகாரர்களின் வரிசைக்கிரமம்.


திருமண வலிகாரர்களின் வரிசைக்கிரமம்.

01. தந்தை
02. அவரின் தந்தை (தந்தையின் தந்தை)
03. அவரது தந்தை.
04. பெண்ணின் உடன் பிறந்த சகோதரன்.
05. தந்தை வழிச் சகோதரன்.
06. பெண்ணின் உடன் பிரந்த சகோதரரின் மகன். (அவரது மரணத்திற்குப் பின்பு)
07. தந்தை வழிச் சகோதரனின் மகன்.
08. தகப்பன் உடன் பிறந்த சகோதரர்கள் (சின்னப்பா அல்லது பெரியப்பா).
      (அவரது மரணத்திற்குப் பின்பு)
09. தகப்பன் வழிவந்த சகோதரன் (சின்னப்பா அல்லது பெரியப்பா)
      (அவரது மரணத்திற்குப் பின்பு)
10.தரனின்; (சின்னப்பா அல்லது பெரியப்பா)வின் மகன்.
     (அவரது மரணத்திற்குப் பின்பு)
11. தகப்பன் வழிவந்த சகோதரன் (சின்னப்பா அல்லது பெரியப்பா) வின் மகன்
      (அவரது மரணத்திற்குப் பின்பு)

12. நீதிபதி (காழி)
    (அவரது மரணத்திற்குப் பின்பு)

    (அவரது மரணத்திற்குப் பின்பு)

    (அவரது மரணத்திற்குப் பின்பு)

    (அவரது மரணத்திற்குப் பின்பு)

   (அவரது மரணத்திற்குப் பின்பு)

  (அவரது மரணத்திற்குப் பின்பு)

இவ்வரிசைக்கிரமத்தில் தான் திருமணங்கள் நடைபெற வேண்டும் இதில் தகப்பன் அல்லது தகப்பனின் தகப்பன் திருமணத்தை முடித்து வைக்கின்ற பொழுது பெண்ணின் அனுமதி பெறுவது சுன்னத்தாகும். அனுமதி பெறாது முடித்து வைத்த திருமணமும் ஆகுமாகும்.

விதவைக்கு திருமணம் முடித்து வைக்கின்ற போது தகப்பன் அல்லது தகப்பனின் தகப்பனாக இருப்பினும் வாய்மூல அனுமதி அப்பெண்ணிடத்திலிருந்து பெறப்பட்ட பின்னரே முடித்து வைக்கலாம். ஏனைய வலிமார்கள் (ஒலிகாரர்கள்) திருமணம் முடித்து வைக்கின்ற போது மணமகளிடம் அனுமதி பெறாது முடித்து வைக்கின்ற திருமணம் செல்லுபடி அற்றதாகும் அது காளியாக இருப்பினும் சரியே!

காழி திருமணம் முடித்து வைக்கும் சந்தர்பங்கள்

01. மேற்கூறப்பட்ட வலிமார்கள் மரணித்த பொழுதோ அல்லது இல்லாதிருக்கின்ற பொழுதோ.
      உதாரணமாக :- புதிதாக இஸ்லாத்தை தழுவிய பெண்ணைப் போல.

02. உரிய வலிகாரன்
      உதாரணமாக :- தகப்பன் 128 முஅ க்கு அப்பால் உள்ள தொலைதூரத்திலிருக்கின்றவர்
     வந்து திருமணத்தை நேரடியாக நடத்தி வைக்க முடியாத நிலை ஏற்படல்.

03. உரிய தகப்பன் அல்லது உரிய வலிகாரர் திருமணத்தை முடித்து வைக்க மறுத்தல்.
      காழியார் நியமிக்கப்படாத ஊரில் வசிப்போருக்கும், ஓர் ஊரில்
      காழியொன்று இருந்தும் அவர்மூலமாக திருமணத்தை முடித்து வைக்க
      விரும்பாதவர்களுக்குமான, திருமணம் முடித்து வைக்கும் ஆலேசனை:-

தன் தேவைக்கேற்ப ஊருக்கு வந்துபோக முடியாத ஒருவர் 128முஅ ரை தாண்டிய பிரதேசத்துக்கு போக நாடியவர் தான் பிரயாணம் செய்வதற்கு முன்னால் தனக்கு விரும்பிய அவர் திருமணத்தை முடித்து வைக்க (ஆகுமான ஒருவரை)
''எனது அதிகாரத்துக்குள் உட்பட்ட இன்னாரை திருமணம் முடித்து வைக்க உங்களை பொறுப்புச் சாட்டுகிறேன். எனக்
குறித்துக்கூறி அதனை ஒரு எழுத்து வடிவத்தில் ஆக்கி அவருடைய ஒப்புதலை பெற்று நம்பிக்கையாளர் சபைஃ உலமா சபை போன்ற நிர்வாகங்களுக்கு ஒப்படைத்து விட்டு செல்வாரேயானால் அல்லது தான் வசிக்கும் பிரதேசத்தினுடைய நீதிமன்றத்தின் (காழி) மூலம் ஒப்புதல் பெற்று உறுதிப்படுத்தப்பட்ட சத்தியக்கடதாசியின் மூலம் குறித்த ஒருவருக்கு குறித்துக்கூறி அனுப்பிய கடிதத்தின் மூலம் திருமணங்களை நடத்தி வைக்க ஆகுமாகும். இதற்கு
மாற்றமாக இணயத்தளங்கள், தொலைபேசிகள் ஊடாக திருமணங்களை நடத்தி வைப்பது நம்பகத்தன்மையில்லாத ஒரு விடயமாக இருப்பதால் அத்திருமணம் செல்லுபடியற்றதாகும்.

எனவே மேற்கூறப்பட்ட அமைப்புக்கு மாறாக திருமணமொண்று முடித்து வைக்கப்பட்டிருப்பின்
அத்திருமணத்தின் மணமகன் அப்பெண்ணுடன் தாம்பத்திய உறவில் இணைந்திருப்பின் அவர் தலாக் சொல்லியோ அல்லது காழியார் மூலமாக அவ்விவாகம் இரத்துச் செய்யப்பட்டு (பஸ்ஹ்) புதிய ஒரு திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும். ஆயினும் முன்னைய திருமணத்தின் மூலமாக குறித்த மஹர் முழுமையாக அப்பெண்ணுக்கே சொந்தமாகும். ஆதலால் அப்பெண்ணின் அனுமதியுடன் புதிய மஹர் வைத்து இரு சாட்சிகள் முன்னிலையில் உரிய வலி மூலம் அல்லது மேற்கூறிய ஒழுங்கின் பிரகாரம் மறுமணம் செய்து கொள்ளப்படவேண்டும்.

ஏனெனில் திருமணம் வியபாரக் கொடுக்கல், வாங்கல்களின் ஒப்பந்தங்களை போலன்று இது ஒரு இல்லற வாழ்வின் ஒன்று சேர மார்க்க ரீதியான அனுமதியாகும்.

எனவே மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி திருமணங்களை சீர்படுத்தி தூய சந்ததியினரை
உருவாக்க அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் அருள்பாலிப்பானாக.

'' அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன்""


அல்-ஹாஜ், அல்-மௌலவி.M.Iஅப்துல் காதர் (மிஸ்பாஹி)
போதனாசிரியர்,
தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி,
சம்மாந்துறை.
தொடர்புகளுக்கு
 077 6668096

ஹலால் சான்றிதழ்: அரசாங்கம் பொறுப்பேற்க உலமா சபை வேண்டுகோள்.



(எம்.எஸ்.பாஹிம்)
ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் பெறுப்பேற்று அனைத்து சமூகங்களும் ஏற்கும் விதமான ஒரு பொறிமுறையை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரியுள்ளது.

இதற்காக தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் முன்மாதிரியாகக் கொண்டு செயற்படலாமெனவும் உலமா சபை தெரிவித்தது.

ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பிற்பகல் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது உலமா சபை மேற்படி வேண்டுகோளை விடுத்தது.

இனங்களுக்கிடையே பிரிவினையைத் தோற்றுவிக்கும் விதத்தில் ஹலால் சான்றிதழ் தொடர்பாக தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே தமது அமைப்பு, இந்த மாற்று யோசனையை முன்வைப்பதாக உலமா சபைத் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

முஸ்லிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சாதகமான தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுத் தருமென நம்புவ தாகவும், தங்களது மாற்று யோசனை குறித்து ஜனாதிபதி நியமித்துள்ள அமை ச்சரவை உபகுழுவுடன் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.

உலமாசபைத் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷேக் எம்.எம்.ஏ.முபாரக், ஹலால் பிரிவின் தலைவர் அஷ்ஷேக் முர்ஷித் ஆகியோர் கலந்துகொண்ட இந்தச் செய்தியாளர் மாநாட்டில் மேலும் குறிப்பிட்டதாவது,

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை முஸ்லிம் சமூகத்தவருக்கு மாத்திரம் வரையறுத்துக்கொள்ளுமாறு சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி வேண்டுகோள் விடுத்தது. முஸ்லிம்கள் ஹலால் ஆனவற்றை மாத்திரம் உண்ண வேண்டும் என்ற கட்டாய மார்க்கக் கட்டளையை பின்பற்றுவதற்கு அவர்களுக்கு துணைபுரியும் நோக்குடனேயே ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதில், இலாபம் பெறுவது உட்பட வேறு எந்த உள்நோக்கமும் கிடையவே கிடையாது என்றும் இடைவிடாது நாம் கூறிவரும் நிலைப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றனர்.

இதை நிரூபிக்கும் ஒரு நடவடிக்கையாக 2012 மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுற்ற ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் கடைசி நிதியாண்டின் வரவுசெலவு விபரத்தின் முக்கிய விடயங்களை பொதுமக்கள் பரிசீலனைக்கு முன்வைக்க நாம் முடிவுசெய்தோம். அதன்படி, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் நமது அமைப்புடன் பதிவு பெற்றிருந்த 150 ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் நாம் பெற்ற மொத்த வருமானம் 17,902,807.50 ஆகும். ஹலால் சான்றிதழ் தொடர்பான செயற்பாடுகளுக்குக்குரிய செலவீனங்களுக்குப் பின் ரூபா 2,669,420.80 இலாபமாகப் பெறப்பட்டதுடன் இத்தொகை நமது ஹலால் சான்றிதழ் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டு வருகின்றது.

மேற்படி விபரங்களின் அடிப்படையில் ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம் தீய நோக்கங்களுக்காக செலவிடப் படுவதாக சிலரால் கூறப்படும் குற்றச் சாட்டுக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று திட்டவட்டமாக மறுக்கின்றோம். மாறாக நம்மிடம் ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கு ஒப்பீட்டு அடிப்படையில் மிகச் சிறியதொரு கட்டணத்தையே செலுத்தவேண்டும். அதன் காரணமாகவும், அதன் ஒளிவுமறைவற்ற முறைமை காரணமாகவும், நிறுவனங்கள் பெறக்கூடிய பொருளாதார நன்மை மிகவும் பாரியதாகும். மேலும் இச்சான்றிதழ் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த மிக அவசியம் என்ற அடிப்படை உண்மைகளை உற்பத்தி நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. அதன் காரணமாக அவை தாமாக முன் வந்து ஹலால் சான்றிதழை பெறுகின்றன என்பதே உண்மை நிலையாகும்.

மேற்படி விடயங்களை நாம் மீண்டும், மீண்டும் தெளிவுபடுத்தியும், நமது கணக்கு விபரங்களை உரிய அதிகாரிகள் வந்து பரிசீலனை செய்து உண்மையை அறியலாம் என்றும் நாம் அழைப்பு விடுத்தும் தவறான கருத்துக்களையும் அடிப்படையற்ற சந்தேகங்களையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி ஹலால் சான்றிதழ் விடயத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் குறிப்பாக நட்புறவுடன் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் குழப்பத்தையும், பிரிவினையையும் ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்ற நிலை எம்மை கவலைகொள்ளச் செய்துள்ளது என்றனர்.

இந்த அடிப்படையில் இனங்களுக்கி டையே பிரிவினையை தோற்றுவிக்கும் விதத்தில் ஹலால் சான்றிதழ் தொடர்ந்தும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கோடு இந்தப் பிரச்சினைக்கு ஒரு மாற்று யோசனையை முன்வைக்க விரும்புகின்றது.

அதன்படி, ஹலால் சான்றிதழ் செயற் பாட்டை அரசாங்கமே பொறுப்பேற்று ஏற்கும் விதமான ஒரு பொறிமுறையை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் என உலமா சபை ஆலோசனை தெரிவிக் கிறது. இதற்காக தற்சமயம் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் ஹலால் சான்றிதழ் செயற்பாடுகளை இல ங்கை அரசு முன்மாதிரியாகக் கொண்டு செயற்படலாம். நடைமுறையிலுள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையானது ஒரு வர்த்தக, இலாபமீட்டும் நோக்கில் அறிமுகப்படுத்தவில்லை என்பதையும் சமூகத்தின் நியாயமான ஒரு தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் ஒரு சேவையாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி தினகரன்..

சம்மாந்துறை அல் ஹிக்மா பகல் பராமரிப்பு நிலையத்தின் 2012ம் ஆண்டின் இறுதிக் கலைநிகழ்வுகள்.


21 ம் வருட பூர்த்தியினை முன்னிட்டு சம்மாந்துறை அல் ஹிக்மா பகல் பராமரிப்பு நிலையத்தினால் 2012.12.26ம் திகதி  இறுதி கலை நிகழ்வு அப்துல் மஜீத் மண்டபத்தில்  விமர்சையாக இடம்பெற்றது.




 www.sammanthurai.net

இன் நிகழ்வில் அல்-ஹிக்மா முன்பள்ளி பராமரிப்பு நிலையத்தின் 120 மாணவர்களினாலும் இவ்கலைநிகழ்வு, திரளான மக்கள் கூட்டத்தினாலும் பிரதம  கௌரவ மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், விசேட அதீதி கௌரவ நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் கௌரவ (பொத்துவில்) பிரதேசசபை மு.தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக் ஆகியோர்கள் அதீதிகள் அமோக வரவேற்புடன் வரவேற்று  இவ்கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகல மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதல்களும் அதீதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.


ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்

இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இச்செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மூதூரை சேர்ந்த ரிசானா நபீக், அங்கு தான் புரிந்த வீட்டு உரிமையாளரின் நான்கு மாத சிசுவினை கடந்த 2005ஆம் ஆண்டு கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு நீண்ட காலமாக அந்நாட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
 
இந்நிலையில் சிசுவை கொலை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்து அந்நாட்டு நீதிமன்றம் ரிசானாவிற்கு மரண தண்டனை தீர்ப்பு விதித்திருந்தது.
 
இந்த தீர்ப்பினை மீள் பரீசிலினை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைப்புகளும் சவூதி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




2013.01.09


அல்-வஸத் பாலர் பாடசாலை மற்றும் குர்ஆன் மத்ரஸா ஆகியவற்றின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும்

சம்மாந்துறை அல்-வஸத் பாலர் பாடசாலை மற்றும் குர்ஆன் மத்ரஸா ஆகியவற்றின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் சென்ற 15.12.2012 சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் அதன் நிருவாக சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் MIM. இஸ்ஹாக் (நளீமி) அவர்களின் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

 இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி திருமதி ஸரீனா  UMA. கபூர் அவர்களும் கௌரவ அதிதியாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல் ஹாஜ்  I.A. ஜப்பார் (J.P.) அவர்களும் விசேட  அதிதியாக சாய்ந்தமருது ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க்  NM.  அப்துல் முஜீப் (நளீமி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.



தகப்பன் வழி கொண்டே குடி வழி கணிக்கப்படும்;அஷ்ஷைக்.எம்.பி.அலியார் (ஹஸரத்)


அஷ்ஷைக்.எம்.பி.அலியார் (ஹஸரத்)
அதிபர், தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரி,
தலைவர்,ஜம்இய்யதுல் உலமா,
அமீர், மஜ்லிஸ் அஷ்ஷறா,
சம்மாந்துறை.
20-11-2012


தகப்பன் வழி கொண்டே குடி வழி கணிக்கப்படும்.

குடி வழி என்பது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தகப்பன் வழி கொண்டே கணிக்கப்படும் இதுவே அல்குர்ஆனின் கோட்பாடாகும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெயர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின் அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர். (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால் உங்கள் மீது குற்றமில்லை ஆனால் உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸ{றதுல் அஹ்ஸாப் - 05) 
---------------------
இக்கருத்தே சம்மாந்துறை ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடுமாகும். தனது வளர்ப்பு மகனை தன்னுடைய மகனாக அழைக்க முடியாது என அல்குர்ஆன் தடைசெய்திருந்த போதும் எவ்வாறு சொந்த மகனை தனது தாய்வழி கொண்டு அழைக்க முடியும். இவ்வாறான மார்க்கத் தெளிவை கடந்த 2008 ம் ஆண்டு; அன்றிருந்த நம்பிக்கையாளர் சபைக்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தோம்.       
     
இதற்கு மாறாக தாய் வழியை அடிப்படையாகக் கொண்டு நூல் வெளியிடுவது கவலைக்குரிய விடயமாகும். எனவே தாய் வழி குடிக்கணிப்பு தவறானதும் இந்துக்களின் கலாச்சாரமுமாகும்.

முஹர்ரம் மாதம் சுன்னத்தான நோன்பு நோற்பதில் வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்யும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே வேதக்காரர்களைக் கூட பின்பற்றுவதற்கு இஸ்லாம் அனுமதிக்காத போது எவ்வாறு நாம் இந்துக்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவது? 
ஆகவே இதிலிருந்து தவிர்ந்து எதிர் காலத்தில் ஆண்களின் குடி வழி முறையினை பின்பற்ற உலமா சபை, நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷறா ஆகியோரின் ஆலோசனையைப் பெற்று செயல்படுவதோடு, இந்த இஸ்லாமிய புது வருடத்திலிருந்து இஸ்லாம் காட்டித் தந்த வழி முறைக்கு அமைவாக நடந்து கொள்ளுமாறும் அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.       

நன்றி – வஸ்ஸலாம்

இப்படிக்கு
அஷ்ஷைக்.எம்.பி.அலியார் (ஹஸரத்)

புதிய மாணவர்கள் அனுமதி - 2013

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் தரம்-1 யில் 2013 ஆண்டிற்கு புதிய மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்களை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நீங்கள்
(22-11-12) திகதி முதல் பெற்று கொள்ள முடியும்.


சமுர்த்தி வங்கி ஊழியர்களுக்கு கணினி பயிற்சி





அம்பாறை மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றும் தமிழ்மொழிமூல சமுர்த்தி முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள்,புத்தகக்காப்பாளர்கள் ஆகியோருக்கு கணினி செயற்பாடு தொடர்பில் இருநாள் பயிற்சிநெறி நிந்தவூரிலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் 17-11-2012  சனிக்கிழமை ஆரம்பமானது. 

இலங்கையில் நுண்நிதி நிறுவனங்களின் வரிசையில் இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் கீழியங்குகின்ற சமுர்த்தி வங்கிகள் பாரிய பங்களிப்பை செய்கின்றன.  இந்நிலையில், சமுர்த்தி வங்கிகள் வருமானம் குறைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்து வறுமையை குறைப்பதற்கான பங்களிப்பைச் செய்கின்றது.  இவ்வாறு செயற்பட்டுவரும் சமுர்த்தி வங்கிகளை நவீன முறையில் கணினி மயப்படுத்தி அதனூடாக மக்களுக்கு சிறந்த துரித சேவையை வழங்கும் நோக்குடன் இப்பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பயிற்சிநெறியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மட்டக்களப்பு அஸ்வீன்,கணினி நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் ஈ.சுகுமார் கலந்து கொண்டனர். 

KINDS21- நண்பர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இலவச கல்வி கருத்தரங்கு.


(எமது செய்தியாளர்)
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவூள்ள மாணவர்களின் நலன் கருதி, சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கி வரும் KINDS21 நண்பர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற  இலவச கல்வி கருததரங்கு முதற்கட்டமாக ஆங்கில விளக்கவுரை Mr.ALM.Hakeem BA(English) அவர்களினால் சனிக்கிழமை 17-11-2012 திகதி  சம்மாந்துறை தாறுஸ்சலாம் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. 

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்ளுக்கான இலவச கல்வி கருத்தரங்கு.


இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் நலன் கருதி  KINDS-21 நண்பர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இலவச கல்வி கருததரங்கு நாளை சனிக்கிழமை சம்மாந்துறை தாறுஸ்சலாம் மகாவித்தியாலய மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
www.sammanthurai.net




பாடம் :- ஆங்கிலம்
ஆசிரியர்:- ALM.ஹகீம் (விரிவுரையாளர் கொழும்பு)
இடம்:- சம்மாந்துறை தாறுஸ்சலாம் மகா வித்தியாலயம்.
நேரம்:-  8.30AM
திகதி: 17.11.2012

குறிப்பு: மாணவர்களிடமிருந்து எவ்வித   
                   கட்டணங்களும்     அறவிடப்படமாட்டாது.  


தகவல்: G.M. Mohamed Sathik - Secretary

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி ஹன்ஸா விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.


(ஏ.எம். தாஹா நழீம்)
செல்வி, MR. ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் – 9 ல் கல்வி கற்கும் மாணவி செல்வி MR. ஹன்ஸா மாகாண மட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த வெற்றிக்காக இப்பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றும் ஆசிரியை Mrs. KA. நஸீர் அவர்களும் இப் பாடசாலையின் அதிபர் TM. தௌபீக் அவர்களும் இம் மாணவியை வழிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம் மாணவி இதற்கு முன்னரும் பல பரிசில்களை மாகாண, மாவட்ட, வலய மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
மேலும், இம்மாணவி இப்பாடசாலையின் மாணவத்தலைவி என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்.


இவரை எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார், பாடசாலை சமூகமும் இவரை வாழ்த்துக்கின்றனர்.

2013 பட்ஜட் ஒரே பார்வையில்.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் வரவு செலவுத் திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றம் நேற்று நண்பகல் 12.50 க்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியபோது, நிதியமைச்சரென்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

நண்பகல் ஒருமணிக்கு தனது வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி, சரியாக பி. ப. 3.35க்கு தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக அரசாங்க ஊழியர்கள்,
ஓய்வூதியம் பெறுவோர்,விவசாயிகள்,சிறுதொழில் முயற்சியாளர்கள்,படை வீரர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள், வெளிநாட்டில் பணிபுரிவோர்,உள்ளூர் உற்பத்தியாளர்கள், பெருந்தோட்டத் துறையினர் அடங்கலான பல பிரிவினர் நன்மையடைகின்றனர்.

2013 ஆண்டிற்கான இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளும் முன்மொழிவுகளும் வருமாறு :


www.sammanthurai.net
 
Support : | Special Design:AR.S | Saji.Template
Copyright © 2012. Sammanthurai News - All Rights Reserved
AR.S Template